×

வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் போக்சோ குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்று தர வேண்டும்: ஐ.ஜி. கண்ணன் உத்தரவு

வேலூர்: வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் போக்சோ குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்று தர வேண்டும் என 4 மாவட்ட எஸ்.பிக்களுக்கு, வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் உத்தரவிட்டுள்ளார். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பிக்களுடன், வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் ஆலோசனை நடத்தினார். போக்சோ வழக்குகள் எத்தனை உள்ளது, நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் எத்தனை? என கேள்வி எழுப்பினார். போக்சோ வழக்கில் சிக்கிய குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்று தர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

The post வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் போக்சோ குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்று தர வேண்டும்: ஐ.ஜி. கண்ணன் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vellore Police Sarkam ,I.G. Kannan ,Vellore ,Dinakaran ,
× RELATED வேலூர் அடுத்த மேல்மொணவூரில் தேசிய...